2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

ஓட்டமாவடியில் விபத்து ; தாயும், மகனும் காயம்

Janu   / 2025 ஏப்ரல் 06 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதான வீதியில்  சனிக்கிழமை (5) மதியம் இடம்பெற்ற விபத்தில் இளம் தாயும் அவரது ஏழு வயது மகனும் காயமடைந்துள்ளனர்.

குறித்த இருவரும் பேருந்தில் இருந்து இறங்கி வீதியைக் கடக்க முற்பட்ட போது பிரதான வீதியால் வேகமாக மோட்டார் சைக்கிள் இருவர் மீதும் மோதியுள்ளது.

இதில், காயமடைந்த தாயும், மகனும் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எச்.எம்.எம்.பர்ஸான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .