Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 மார்ச் 18 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய கடல் பகுதியில் கடற்கரையில் நங்கூரமிட்ட நிலையில் நிறுத்தப்பட்ட படகு கடலில் விழுந்து மூழ்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மூழ்கிய படகு சுமார் 65 லட்சத்துக்கும் பெறுமதியானது டன் கனரக வாகனத்தின் உதவியுடன் கரையை நோக்கி இழுப்பதற்கான முயற்சிகளை அப்பகுதி மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
கடற்கரைப்பகுதி ல் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் மூழ்கியுள்ள படகினை மீட்பதற்கான மற்றொரு முயற்சியாக இலங்கை கடற்படையினரின் உதவியும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.செவ்வாய்கிழமை(18) குறித்த கடல் பகுதியில் தொழில் செய்துவரும் மீனவர் ஒருவர் குறித்த படகு முழ்குவதை இனங் கண்டு ஏனையோருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து குறித்த பகுதிக்கு சென்ற பொதுமக்கள் குழுவினர் மீட்கும் நடவடிக்கையில் ஈடுட்டுள்ளனர்.
கடற்கரை பிரதேச மீனவர்கள் தமது தோணி மற்றும் படகுகளையும் நிறுத்தி வைப்பதற்கு தற்போது போதிய இடவசதியும் , தமது மீன்பிடி உபகரணங்களை பாதுகாத்து வைப்பதற்கான மீன்வாடிகளும் இல்லாமலிருப்பது தமக்குப் பெரும் கவலை அளிப்பதாகவும் , இந்த நிலை ஏற்படுவதற்கு ஒலுவிலில் அமைக்கப்பட்டுள்ள மீன்பிடி துறைமுகம் ஒரு காரணமாகும் .
என பிரதேச மீனவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர் தற்போது கடலரிப்பை தடுப்பதற்கான தடுப்புக் கல் இடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இவ்வாறு தொடர்ச்சியாக கடலரிப்பினால் கடற்கரை பிரதேசம் காவு கொள்ளப்பட்ட போகும் ஆனால் எதிர்காலத்தில் இப்பிரதேசத்தில் கடற்கரை ஒன்று முழுமையாக இல்லாமல் போனாலும் போகலாம் என்ற அச்சம் இப்பிரதேச மக்களிடையே அதிகரித்துள்ளது.
பாறுக் ஷிஹான்
6 hours ago
9 hours ago
20 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
20 Sep 2025