S.Renuka / 2025 மார்ச் 19 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, தமண பகுதியில் புதன்கிழமை (19) அதிகாலை 3.30 மணியளவில் காட்டு யானை தாக்கியதில் கல்ஓயா பெருந்தோட்ட நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கரும்புத் தோட்டத்திற்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக கல்லோயா தோட்ட நிறுவனம் தொழிலாளர்களை இரவு நேரக் கண்காணிப்பில் பணியமர்த்தப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு நேரக் கண்காணிப்பில் இருந்தபோது இந்த காட்டு யானை தாக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 39 வயதான கோசல குமார என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
இவர் கல்ஓயா பெருந்தோட்ட நிறுவனத்தின் யானை கட்டுப்பாட்டுப் பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த இடத்தில் மூன்று பேர் பணியில் இருந்தனர், காட்டு யானை தாக்க வந்தபோது, அவர்கள் தப்பிக்க ஓடினார்கள்,
ஆனால் காட்டு யானை அவர்களைத் துரத்திச் சென்று குறித்த நபரைத் தாக்கி கொன்றுள்ளது.
26 minute ago
48 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
48 minute ago
1 hours ago
4 hours ago