2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

காத்தான்குடியில் தீவிர சோதனை

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 26 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

நாட்டில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறுவோரைக் கைது செய்ய காத்தான்குடி நகரில் இராணுவத்தினரும் பொலிஸாரும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காத்தான்குடி பிரதான வீதியில் பெருமளவிலான இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு பல இடங்களில்  வாகனங்களில் செல்வோர் மற்றும் தேவையின்றி வீதிகளில் நடமாடுவோர் மீதும் கடுமையான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இப்பிரசேத்தில் ஊரடங்கை மீறி நடமாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையே இச்சோதனை நடவடிக்கைககள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமைக்கான காரணம் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .