2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

கொரோனாவால் 163 கர்ப்பிணிப் பெண்கள் பாதிப்பு

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 26 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா

கல்முனைப்  பிராந்திய சுகாதார சேவைகள்  பிரிவில் இது வரை 163 கர்ப்பிணிப் பெண்கள் கொரோனாத்  தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி  ஜீ. சுகுணன் இன்று (26)  தெரிவித்தார்.

இவர்களில் தற்போது 39 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஏனையவர்கள் பூரண சுகமடைந்துள்ளதாகவும், கர்ப்பிணிப் பெண்களில் இது வரை எவ்விதமான இறப்புகளும் இப் பிராந்தியத்தில் பதிவு செய்யப்படவில்லையெனவும் தெரிவித்தார்.

இது வரையில் தொற்றாளர்களாக 6,178 பேர் இனங்காணப்பட்டுள்ளதோடு, 138 மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .