2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சகோதரனை கொன்றவர் கைது

Editorial   / 2025 ஜனவரி 23 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான் 

உடன் பிறந்த சகோதரனை கொலை செய்துவிட்டு தலைமறைவாகி இருந்த நபர் வாழைச்சேனை பொலிஸாரினால் வியாழக்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளார்.


வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் வைத்து 43 வயதான இரு பிள்ளைகளின் தந்தை தனது உடன் பிறந்த சகோதரனால் புதன்கிழமை (22) கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

கொலை செய்துவிட்டு தலைமறைவாகியய நபரை வாழைச்சேனை பொலிஸார்   பிறைந்துறைச்சேனை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X