Janu / 2024 ஜனவரி 01 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தூர் - கிழக்கில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் சனிக்கிழமை (30) இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத சிலர் குறித்த வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த தாக்குதலில் குறித்த வீட்டின் முன்பகுதி சேதமடைந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
எஸ்.தில்லைநாதன்

5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago