2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பொலிஸாருக்கும் தொற்றியது கொரோனா

Nirosh   / 2021 ஜனவரி 05 , பி.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, கனகராசா சரவணன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆண்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனையில் பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட  25 பேருக்கு இன்று (05) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 288ஆக அதிகரித்துள்ளது. 

பட்டிப்பளை சுகாதார பிரிவில் 2 பேருக்கும், காத்தான்குடி சுகாதார பிரிவில் 16 பேருக்கும், கோறளைப்பற்று மத்திய சுகாதார பிரிவில் 3 பேரும், ஓட்டுமாவடி சுகாதார பிரிவில் ஒருவர் உட்பட 25 பேருக்மே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X