Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2025 ஜூன் 27 , பி.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எல்.எம்.ஷினாஸ்
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை பெரியநீலாவணை அக்பர் கிராமத்தில் வீடொன்றில் நேற்று (26) இரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக குறித்த வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
சம்பவம் ஏற்பட்டதும் உடனடியாக செயல்பட்டு அருகில் உள்ள பொதுமக்கள் சுமார் ஒரு மணி நேரமாக முயற்சி செய்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
வீட்டில் இருந்த தளபாடங்கள், மின்சார பொருட்கள் உட்பட அனைத்து உடைமைகளும் தீயில் கருகி சாம்பலாகியது. எனினும் வீட்டிலிருந்து எவருக்கும் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை. வீட்டில் ஏற்பட்ட மின்னொழுக்கு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
58 minute ago
2 hours ago