Janu / 2024 நவம்பர் 18 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
முச்சக்கர வண்டியின் டயஸ் போட்டிற்குள் மறைந்திருந்த விஷம் நிறைந்த கருநாகம் பாம்பு, வாகனம் திருத்துநரின் உதவியுடன் வெளியே எடுக்கப்பட்டது.
வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி ஞாயிற்றுக்கிழமை (17) அன்று சிறுவர்கள் உட்பட பயணிகளை ஏற்றிச் சென்றபோது பயணத்தின் இடையில் மட்டக்களப்பு - கொழும்பு வீதியில் மயிலம்பாவெளி எனுமிடத்தில் வைத்து பாம்பை அவதானித்த சாரதி முச்சக்கர வண்டியை நிறுத்திவிட்டு வாகனம் திருத்துநரை வரவழைத்து வண்டியின் முன் பகுதியை கழட்டி பாம்பை வெளியே எடுத்து காட்டுக்குள் அனுப்பி வைத்துள்ளார்.
கவனயீனமாக சாரதி இருந்திருந்தால் சாரதியை விஷப்பாம்பு தீண்டியிருக்குமென தெரிவிக்கப்படுகிறது.
ரீ.எல்.ஜவ்பர்கான்


40 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago