Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 18 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ . அச்சுதன்
திருகோணமலை வர்த்தக சங்கம் மற்றும் வியாபாரிகள் சங்கம் ஆகியவற்றின் வேண்டுகோளுக்கிணங்க மரக்கறி சந்தை, மீன் சந்தை, தனியார் கடைகள் உள்ளிட்ட அனைத்து வர்த்தக நிலையங்களும் இன்று முதல் ஒரு வாரகாலத்துக்கு மூடப்பட்டுள்ளன.
எனினும் அத்தியாவசிய சேவைகளாகிய மருந்தகங்கள், உணவகங்கள் மற்றும் பலசரக்கு கடைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையில் தீவிரமடைந்து வரும் கொரோனாத் தொற்றுப் பரவலைத் தடுத்து மக்களை பாதுகாக்கும் வகையிலேயே, மேற்படி திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது.





26 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
35 minute ago