2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞன் படுகாயம்

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 01 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை_கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைச் சேனை பகுதியின் கிண்ணியா பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை(31) அன்று மாலை இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

நேருக்கு நேர் இரு மோட்டார் சைக்கிள்களிலும் மோதியதில் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவ்வாறு படுகாயங்களுக்கு உள்ளான கிண்ணியா மாலிந்துரை பகுதியை சேர்ந்த இளைஞன் என்றும் தெரியவருகிறது.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

ஏ.எச் ஹஸ்பர் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .