2024 மே 08, புதன்கிழமை

விபத்தில் இளைஞன் பலி

Janu   / 2024 ஜனவரி 28 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

டிப்பர் - மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று சனிக்கிழமை (27)  இடம்பெற்றுள்ளது.

தம்பாளை வேப்பம் புரயை சேர்நத 17 வயதுடைய அன்வர் அப்ரான் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் தம்பாளை - றிபாய் புர உள்ளக காபர்ட் வீதியால் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே இவ் விபத்து  ஏற்ப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் விபத்தை ஏற்படுத்திய டிப்பர் சாரதியை  கைது செய்யப்பட்டுள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  புலஸ்த்திபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 எச்.எம்.எம்.பர்ஸான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X