2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

வீடு வீடாகச் சென்று செலுத்தப்படும் தடுப்பூசி

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 23 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடியில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட, வீட்டை விட்டு வெளியில் வரமுடியாத நிலையில் உள்ளோருக்கு அவர்களது வீடுகளுக்குச் சென்று கொரோனாத்  தடுப்பூசியைச் செலுத்தும் நடவடிக்கை நேற்றைய தினம் (22) ஆரம்பிக்கப்பட்டது.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.நபீல் தலைமையில் நடைபெற்ற இச்செயற்பாட்டில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், தாதியர்கள், சுகாதார ஊழியர்கள் ஆகியோர் ஈடுபட்டனர்.

இச்செயற்பாட்டுக்கு  காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குச் சொந்தமான வாகனம் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .