A.P.Mathan / 2012 ஒக்டோபர் 09 , மு.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகத்திற்கும் கர்நாடக மாநிலத்திற்கும் இடையே உள்ள காவிரி நதிநீர் பகிர்வு பிரச்சினை இரு புறமும் உள்ள மக்களை ஏகத்திற்கும் பதற்றத்தில் மூழ்க வைத்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக நடைபெறும் போராட்டங்கள், பந்த் எல்லாமே அங்குள்ள தமிழர்களை அச்சத்தில் வாழ வைத்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தின் மூலம் மட்டுமே தீர்வு என்ற அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்க, கர்நாடக மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷட்டரோ, "காவிரியில் தண்ணீர் திறந்து விட பிரதமர் மன்மோகன்சிங் போட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று காவிரி நதி நீர் ஆணையம், உச்ச நீதிமன்றம் என்று வேகமாக நடையைக் கட்டி பயணித்துக் கொண்டிருக்கிறது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் எஸ்.எம்.கிருஷ்ணா, இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர். அவரே, "தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று பிரதமருக்கு கடிதம் எழுதியதும், தமிழகத்தில் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. "தமிழக மத்திய அமைச்சர்கள் (திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள்) ஏன் இதனை கண்டிக்காமல் இருக்கிறார்கள்" என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும், "தன் சொந்த மாநிலத்திற்கு ஆதரவாகப் பேசிய கிருஷ்ணா மத்திய அமைச்சராக நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார். ஆகவே அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்" என்று டொக்டர் ராமதாஸும் கோரிக்கை வைத்துள்ளனர், கண்டித்துள்ளனர். ஆனால் தி.மு.க.வோ, ஆளும் அ.தி.மு.க.வோ இதுபற்றி கருத்துக் கூறாமல் அமைதி காக்கின்றன.7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago