A.P.Mathan / 2012 ஓகஸ்ட் 27 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
தி.மு.க.விற்குள் புதிய பனிப்போர் தொடங்கியிருக்கிறது. பொருளாளர் பதவியில் இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கும், ராஜ்ய சபை எம்.பி.யாக இருக்கும் கனிமொழிக்கும் இடையேயான இந்த புதிய போட்டி கட்சிக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 2-ஜி அலைக்கற்றை வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையிலிருந்து வெளிவந்த கனிமொழி தமிழகத்தில் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். தி.மு.க.வின் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் தி.மு.க.வினரை சந்திக்கிறார். குறிப்பாக கீழ்மட்ட நிர்வாகிகளிடம் மிகுந்த நம்பிக்கையோடு மனம் விட்டுப் பேசுகிறார். தி.மு.க. அறிவிக்கும் முக்கிய போராட்டங்கள் என்றாலும் சரி, கொள்கை விளக்கப் பொதுக்கூட்டங்களாக இருந்தாலும் சரி, அவற்றில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள கனிமொழி தவறியதில்லை. குறிப்பாக சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களை சென்று சந்தித்து வந்தார். அதிலும் ஸ்டாலினுடன் வம்பு பண்ணிக் கொண்டிருக்கும் தி.மு.க. முன்னணி தலைவர்களில் ஒருவரான வீரபாண்டி ஆறுமுகத்தை சிறைச்சாலையில் சந்தித்தது கட்சிக்குள் பரபரப்பாக பேசப்பட்டது.08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026