2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

எச்.டபிள்யூ.பி.எல்: பிலிப்பைன்ஸின் மைண்டானோவில் சமாதான அபிவிருத்தி

Princiya Dixci   / 2021 ஜூலை 31 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

24 ஜனவரி 2014 அன்று, பரலோக கலாச்சாரம், உலக சமாதான, ஒளி மறுசீரமைத்தல் (எச்.டபிள்யூ.பி.எல்) அரசியல் மற்றும் மதத் தலைவர்கள் உள்ளிட்ட உள்ளூர் பிரதிநிதிகளுக்கு மைண்டானாவோவில் 40 வருடகால மோதலுக்கான சமாதான ஒப்பந்தத்தில் கையொப்பமிட முன்வந்தது. தற்போது,   பொதுமக்கள் குழு தலைமையிலான சமாதான உடன்படிக்கை அமுலில் உள்ளது மற்றும் பிலிப்பைன்ஸ் அரசாங்கத்திற்கும் மோரோ ஜனங்களுக்கும் இடையில் சமாதான உடன்படிக்கைக்கு சமாதான சூழ்நிலையை உருவாக்க பங்களித்துள்ளது.

எச்.டபிள்யூ.பி.எல் 2013 ஜூன் முதல் பிலிப்பைன்ஸில் சேரிகளுக்கு நிவாரணம் அளித்தல், மதத் தலைவர்களுடன் இடைக்கால நல்லிணக்கத்திற்காக உரையாடல்களை நடத்துதல் மற்றும் அமைதிக்கான இளைஞர் வலையமைப்பை நிறுவுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளையும் நடவடிக்கைகளையும் நடத்தியது.

 HWPL முதல் சமாதான விழாவை 24 ஜனவரி 2014 அன்று பிலிப்பைன்ஸின் ஜெனரல் சாண்டோஸில் உள்ள மைண்டானோவில் நடத்தியது. இரு மதங்களைச் சேர்ந்த விசுவாசிகள், மிண்டானாவோ மாநில பல்கலைக்கழக மாணவர்கள், சர்வதேச அமைதி இளைஞர் குழுவின் அங்கத்தவர்கள் உட்பட 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அதே நாளில், மகுயிண்டனோவின் ஆளுநரும் கத்தோலிக்க பேராயருமாகிய இஸ்மாயில் ஜீ. மங்குடடாடு (Esmael G. Mangudadatu) உட்பட பிரதிநிதிகள் யாவரும் சமாதானத்தின் சிருஷ்டிப்பு மற்றும் போர் நிறுத்தத்திற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார்கள். எச்.டபிள்யு.பி.எல் (HWPL) இன் படி மிண்டானோ சமாதான ஒப்பந்தமானது சமாதான அணுகுதலின் அடிப்படையில் பொதுமக்கள் மைய விழிப்புணர்வு முன்னேற்றம் மற்றும் செயற்பாட்டை (civilian-centered awareness improvement and action) முன்வைத்தது.

இந்த அணுகுமுறைக்கு இணங்க, அமைப்பானது மோதலுக்கான ஆதாரங்களாகவுள்ள காரணிகளை அகற்றுவதற்கும், சமாதான வளர்ச்சிக்கான மதிப்புக்களை வலுப்படுத்துவதற்கும், கல்வி, மதம், இளைஞர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட சிவில் சமூகத்தை மையமாகக் கொண்ட சமாதான முயற்சிகளை மேற்கொள்ள உள்நாட்டு குழுக்களுடன் ஒத்துழைக்கின்றது.

அவருடைய 84வது வயதில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தலைவர்களுடன் கூட அவர் தனது கைகளை வைத்திருந்தபோது, எச்.டபிள்யு.பி.எல் (HWPL) இன் தலைவர் மான் ஹீ லீ (Man Hee Lee) “சமாதானத்திற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவது பங்கேற்பாளர்களுக்குக் காட்டப்பட்டபோது, புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்யப்பட்டதான சமாதான ஒப்பந்தத்தை நடுவர் விளக்கினார். கூட்டம் மகிழ்ச்சியின் கைதட்டல்களிலும் மற்றும் ஆரவாரத்திலும் ஆர்ப்பரித்தது என்பதனை நினைவு கூர்ந்தார்.

(HWPL தலைவர் லீ மேன்-ஹீ (center), எச்.ஈ. ஃபெர்னாண்டோ ரொப்ளஸ் கபெல்லா , D.D, டாவோ மறை மாவட்டப் பேராயர் எமரிட்டஸ் (left), மற்றும் ஈச்மாயேல் G. மன்குடாடட்டு, Governor of மகண்டானோவின் ஆளுனர்(right), 24 ஜனவரி 2014 அன்று குடிமக்கள் சமாதான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .