Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Mayu / 2024 நவம்பர் 01 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ
1993 இல் தனது தேர்தல் பிரசாரத்தில் வாக்குறுதியளித்தபடி, குமாரதுங்க புலிகளுடன் அரசியல் பேச்சுவார்த்தைகளில் இறங்கினார். பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுத்த பல உந்துதல்கள் இருந்தபோதிலும், அவரது முயற்சிகள் தைரியமானவை என்று பரவலாகக் கருதப்பட்டது.
குறிப்பாக விடுதலைப் புலிகள் 1993இல் ரணசிங்க பிரேமதாச, லலித் அத்துலத்முதலி, 1994இல் காமினி திசாநாயக்க ஆகியோரை கொலை செய்ததன் பின்னணியில் பேச்சுவார்த்தைகளுக்கு இறங்குவது என்பது ஆபத்தானதாகக் கருதப்பட்டது.
குறிப்பாக பேசுவதற்கான எந்த சமிக்கையையும் புலிகள் தந்திராத சூழலில் பேச்சுகளுக்குத் தயாராவது நல்லதல்ல என்பதே பலரது கருத்தாக இருந்தது.
அதிலும் குறிப்பாக 1991ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி புலிகளால் கொல்லப்பட்டமையானது பேச்சுகளுக்குப் பெரியண்ணான இந்தியா எப்போதும் தடையாக இருக்கப் போவதை உறுதி செய்தது.
இந்தத் தடைகளையும் மீறி, குமாரதுங்க விடுதலைப் புலிகளுடன் பேசுவது என்ற முடிவில் உறுதியாக இருந்தார்.
பேச்சுகளுக்கு அழைப்பு விடுத்தார். சில அவதானிகளின் கூற்றுப்படி, 1995இல் புலிகள் தங்கள் அரசியல் அந்தஸ்தை மேம்படுத்தவும், வடக்கில் தாங்கள் நடத்திக் கொண்டிருந்த இராணுவமயமாக்கப்பட்ட அரை அரசைப் பாதுகாக்கவும் பொதுஜன முன்னணி அரசாங்கத்துடன் ஒரு பேச்சுவார்த்தைகளுக்கு உடன்பட்டனர்.
புலிகளுடனான பேச்சுவார்த்தை செயல்முறை தொடங்கியவுடன், பொதுஜன முன்னணி அரசாங்கம் பிளவுபட்டிருந்த அரசியல் உயரடுக்கினரிடையே அதிகரித்து வரும் சண்டைகளில் சிக்கியது.
விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை அதளபாதாளத்திற்கு தள்ளின. இந்த நிகழ்வுகள் குமாரதுங்கவின் ‘சமாதானத்தின் மீதான அவாவை’ நிரூபிப்பதற்குத் தனிப்பட்ட முறையில் சவால் விட்டன.
அது அவரது அரசாங்கத்தின் பிழைப்புக்காக மட்டுமல்ல, அவரது தனிப்பட்ட அரசியல் வாழ்க்கையையும் காப்பாற்றுவதற்காகத் தேவைப்பட்டது. போர்க்களத்தில் பெற்ற சிறுசிறு வெற்றிகள் ஊட்டிய போதை, சமாதானத்தை நோக்கிய பாதையில் இருந்து புலிகளைத் தடப்புரட்டியது.
எனவே நல்லெண்ண சமிக்கைகளை புலிகள் வழங்கத் தவறினர். இந்த சூழ்நிலைகளின் கலவையானது எதிர்காலத்தில் சமாதானம் மற்றும் சமாதான பலன்களை வழங்குவதற்கான நம்பிக்கையுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது குமாரதுங்கவிற்கு தனிப்பட்ட விருப்பமாகவன்றி, தீவிர அரசியல் தேவைகளாகவும் சூதாட்டமாகவும் இருந்தன.
இலங்கை அரசியல் குறித்து நன்கறிந்த, தங்களை மிதவாதிகளாகக் கருதியோரின் கருத்துப்படி, குமாரதுங்கவினால் விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்ட ‘சமாதான பொதி’, இன்றுவரை நாட்டில் உள்ள எந்தவொரு சிங்கள அரசியல் தலைமையினாலும் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்வுகளை விட மிகவும் மேம்பட்ட முற்போக்கான முயற்சியாகும்.
இலங்கையில் இனப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை எட்டுவதில் குமாரதுங்க அளவிற்கு நியாயமாகவும் நல்லெண்ணத்தோடும் வேறெந்த
அரசியல் தலைவரும் நடக்கவில்லை என்பது பொதுக் கருத்தாகும்.
சுனாமியின் பின்னர் விடுதலைப் புலிகளும் அதிகாரங்களை வழங்குகின்ற சுனாமிக்குப் பிந்தைய கூட்டுச் செயல்பாட்டு மேலாண்மைக் கட்டமைப்பை அவர் ஏற்றுக் கொண்டார் (அது அரசியலமைப்புக்கு முரனானது என்று நீதிமன்றமே தடுத்தது).
குமாரதுங்க உயர் அரசியல் முயற்சிகளுக்கு இணையாக, உள்ள சமாதான இயக்கங்கள் மற்றும் திட்டங்களுக்கு அரச அனுசரணையை வழங்குவதன் மூலம், அனைத்து இனப் பின்னணியிலிருந்தும் சாதாரண சமூகங்களுக்குள் அமைதிக்கான நுண்ணிய மற்றும் இடைநிலை இடைவெளிகளைக் குறைக்கவும் அடிமட்டத்தில் சமூகங்களிடையே நம்பிக்கையையும் பரஸ்பர ஒத்துழைப்பையும் உருவாக்கவும் அவர் ஆதரவளித்தார்.
சாம பலகாயா (அமைதி ஒற்றுமைப் படை), சுடு நெலும் வணிகாயா (வெள்ளை தாமரை இயக்கம்) மற்றும் சாமா தவலமா (அமைதி வாகனம்).
அவரது முயற்சிகள் அரசியலமைப்பு விவகார அமைச்சகத்திற்குள் தேசிய ஒருங்கிணைப்பு திட்ட அலகு போன்ற மிகவும் தேவையான அமைதியை மையமாகக் கொண்ட அரச உள்கட்டமைப்பு வசதிகளை நிறுவுவது வரை சென்றது.
இந்த நடவடிக்கைகளுக்கு இணையாக, குமாரதுங்க அரசியலமைப்பு சீர்திருத்தங்களின் செயல்முறையையும் தொடங்கினார், இது பரவலாக ‘அரசியல் பொதி’ என்று அறியப்படுகிறது. இந்த சீர்திருத்தச் செயல்முறையானது, குமாரதுங்க தனது இரண்டாவது பதவிக் காலத்தில், 2000ஆம் ஆண்டில் இதைப் புதுப்பித்து ஒரு வரைவு அரசியலமைப்பை உருவாக்கினார்.
குறிப்பாக விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கைகளால் இராணுவ வீரர்களின் உடல்கள் இலங்கையின் தென்பகுதிக்கு வந்துகொண்டிருந்தன.
இராணுவத்தில் போரைத் தொடர்வதற்கான மிருகத்தனமாக ஆதரவு இருந்தது. இருந்தபோதிலும், சமாதானத்தை அரசியலமைப்பின் வழியாக அடையும் முயற்சியை குமாரதுங்க கைவிடவில்லை.
பெரும்பான்மையான சிங்களவர்கள் குமாரதுங்கவின் சமாதான முயற்சிகளை யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நிரந்தர அரசியல் தீர்வை நோக்கிய சாதகமான அறிகுறிகளாகக் கருதினர்.
குமாரதுங்கவின் சமாதான பொதி தெற்கு சிங்கள அரசியலில் ஒரு நெறிமுறை அரசைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு நேர்மறையான முன்னேற்றமாகும். அக்காலப்பகுதி குறித்த பெரும்பான்மை சிங்களவர்களின் மனநிலை என்பது “சந்திரிகாவின் காலத்தில் மகிழ்ச்சியாக இருக்கலாம். சமாதானம் இல்லையென்றாலும் குறைந்த பட்சம் சமாதானத்தின் சின்னங்களாவது இருந்தன”.
மேலும், தென்னிலங்கை அரசியல் உரையாடலில் ஒரு மோசமான வார்த்தையாக இருந்த சமஷ்டி என்ற சொல் கூட மக்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சிங்கள மக்களின் பெரும்பான்மையானோரை சமாதானம் நோக்கியும் - குறிப்பாகப் போர் நடந்து உயிர்ச்சேதம் நிகழ்ந்து கொண்டிருந்த நிலையிலும், சமஷ்டி தீர்வுக்கான ஆதரவு நோக்கியும் நகர்த்திய பெருமை குமாரதுங்கவைச் சாரும். ஆனால், அதைப் பயன்படுத்தித் தீர்வை நோக்கி நகர விடுதலைப் புலிகள் தயாராக இருக்கவில்லை.
தமிழ் மக்கள் மத்தியிலும் குமாரத்துங்க மீதான நல்லபிப்பிராயம் இருந்தது.
பொது மக்களின் கருத்துக்களுக்கு முற்றிலும் மாறாக, 2002 மாவீரர் நாள் உரையில் புலிகளின் தலைமை, “தமிழர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் சந்திரிகா சமாதானத்தின் தெய்வம் அல்ல, நாங்கள் அவரை இராணுவத் தீர்வுக்குப் பந்தயம் கட்டும் கடும்போக்குவாதியாகக் கருதுகிறோம். எங்கள் பார்வையில் சந்திரிகா ஒரு போர் வெறியர்” என்று குறிப்பிட்டது.
குமாரதுங்கவின் சமாதான நிகழ்ச்சி நிரல் மற்றும் உயரடுக்கு அரசியல் மற்றும் சிங்கள தெற்கில் அதன் விளைவுகள் பற்றிய மேலதிக பகுப்பாய்வுகள் அவசியமானவை. இங்கு இரண்டு வினாக்கள் முக்கியமானவை.
முதலாவது, தெற்கில் குமாரதுங்கவின் முயற்சிகளுக்கான எதிர்ப்பின் காரணம் என்ன. இரண்டாவது, எவ்வடிப்படையில் விடுதலைப்புலிகள் குமாரதுங்கவின் தீர்வு முன்மொழிவுகளை அலட்சியம் செய்தனர்.
சந்திரிக்காக தீர்வு நோக்கிய தனது நகர்வுக்கு சர்வதேச மத்தியஸ்தத்தை நாடினார். இது தென்பகுதி அரசியலில் ஒரு புதிய அதேவேளை, முள்போன்ற பிரச்சினையை உருவாக்கியது.
ஏனெனில், அந்நியத் தலையீடு குறித்த நேர்மறையான அனுபவத்தையே சிங்களவர்கள் பெற்றிருந்தார்கள். இந்நிலையிலேயே விடுதலைப் புலிகள் சர்வதேச மத்தியஸ்தத்தை ஏற்று கொண்டார்கள்.
பிரான்ஸ், ஜப்பான், இந்தியா எனப் பல நாடுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு இறுதியில் நோர்வே என்று முடிவானது.
ஜெயவர்த்தனா மற்றும் பிரேமதாசாவின் முந்தைய இரண்டு யூ.என்.பி ஆட்சிகளின் போது இலங்கையின் மோதலில் மூன்றாவது தரப்பினராக இந்தியாவின் சர்ச்சைக்குரிய பாத்திரத்திற்குப் பிறகு எந்தவொரு வெளி மத்தியஸ்தத்தையும் தொடர்ந்து நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. ஜயவர்தன ஆட்சியின் போது, ஜே.வி.பி மற்றும் பிற சிறிய சிங்கள தேசியவாத அரசியல் கட்சிகளும் எந்தவொரு வெளிநாட்டுத் தலையீட்டையும் நிராகரிப்பதற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தன. இந்தக் கட்சிகள் அனைத்திற்கும் மத்தியில், ஜே.வி.பி., ஜனாதிபதி பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில், எந்தவொரு சர்வதேச ரூடவ்டுபாட்டையும் கடுமையாக நிராகரித்தது.
அதுமட்டுமல்லாமல், ஜே.வி.பியின் கருத்துப்படி, இந்தியப் பிராந்திய மேலாதிக்கம் மற்றும் இலங்கையில் இந்தியாவின் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான இந்தியச் சதி என்ற ஊகங்கள், அவர்களின் நாடளாவிய எதிர்ப்புகள் மற்றும் எதிர்ப்பிற்கான மற்ற காரணங்களாக இருந்தன, அதை ஜனாதிபதி பிரேமதாசா கொடூரமாக முறியடித்தார். இந்திய அமைதி காக்கும் படைகளின் கைகளால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத் தமிழ் மக்களிடையேயும் அந்நியத் தலையீடு குறித்த கசப்பான நினைவுகள் இருந்தன.
ஜே.வி.பி.யை ஒடுக்குவதற்கு பிரேமதாசா வன்முறையைப் பயன்படுத்தினார்.
ஜே.வி.பி அரச பாதுகாப்பு மற்றும் ஆயுதப்படை உறுப்பினர்களைக் கொன்று இராணுவம் மற்றும் காவல்துறையில் பணியாற்றியவர்களையும் அவர்தம் குடும்ப உறுப்பினர்களையும் அச்சுறுத்தினார்.
இந்த காலகட்டத்தில், வன்முறைச் சம்பவங்களால் 40,000 பேர் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இருந்தபோதும், அந்நியத் தலையீட்டைத் தொடர்ச்சியாக ஜே.வி.பி. எதிர்த்து வந்தது.
எவ்வாறாயினும், 1999 முதல் 2005 வரையிலான குமாரதுங்கவின் இரண்டாவது பதவிக்காலத்தில், அவரது கூட்டணி அரசாங்கத்தில் பங்காளியாகி, இலங்கையின் ஆளும் உயரடுக்கின் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டதன் மூலம், ஜே.வி.பி. குமாரதுங்கவின் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு ஆதரவை வழங்கியது.
பொதுஜன முன்னணியின் கூட்டணி அரசாங்கத்திலிருந்து ஜே.வி.பி. பிரிந்து செல்லும் வரை, அது பெரும்பாலும் மௌனமாக இருந்ததுடன், இலங்கையின் மோதலில் நோர்வே அரசாங்கத்தின் மத்தியஸ்தத்திற்கு மிகுந்த சகிப்புத்தன்மையைக் காட்டியது.
09.27.2024
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
47 minute ago
47 minute ago
2 hours ago