Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஒக்டோபர் 26 , மு.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அழகன் கனகராஜ்
கருக்கலைப்பு, இலங்கை சட்டத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க, சட்டவிரோத கருக்கலைப்பு நிலையங்கள் 11க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதுடன், சட்டவிரோதக் கருக்கலைப்பைச் சட்டமாக்கும் நோக்கமில்லை என்றும் கூறினார்.
நாடாளுமன்றத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (25) வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, ஐ.தே.க எம்.பியான புத்திக பத்திரண கேட்டிருந்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,
“இலங்கையில், கருக்கலைப்புத் தடை செய்யப்பட்டுள்ளது என்றாலும், சட்டவிரோதக் கருக்கலைப்புகள் மேற்கொள்ளப்படும் இடங்கள் பாதுகாப்பற்ற முறையிலும் சட்டவிரோதமான விதத்திலும் செயற்படுகின்றன” என்றார்.
“2012 ஜனவரி 1ஆம் திகதி முதல் 2015 டிசெம்பர் 31ஆம் திகதி வரையிலும், சட்டவிரோதக் கருக்கலைப்பு நிலையங்கள் 11க்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதுவும் தண்டனைச் சட்டக் கோவைக்கேற்பவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பதிலளித்த அமைச்சர், கருக்கலைப்பை சட்டபூர்வமாக்குவதற்கு, எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.
10 minute ago
33 minute ago
49 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
33 minute ago
49 minute ago
54 minute ago