2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

7 நாட்களுக்குள் அறிவிக்கவும்

Gavitha   / 2015 செப்டெம்பர் 14 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாவட்ட அபிவிருத்திக் குழு மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளும் தினம் தொடர்பில் ஏழு நாட்களுக்குள் தனக்கு அறிவிக்குமாறு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் அறிவுறுத்தல் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக குறித்த உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்தலில் வெற்றிப்பெற்ற அரசியல் கட்சிக்கு அவர்கள் வெற்றிபெற்ற மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுக்களின் தலைவர் பொறுப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்தது.

அதன்படி, ஐக்கிய தேசியக் கட்சிக்கு 11 மாவட்டங்களும், ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 08 மாவட்டங்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 3 மாவட்டங்களிலும் அபிவிருத்தி குழுக்களின் தலைமை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .