2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

‘நவம்பர் 18இல் உதயமாகாது’

Princiya Dixci   / 2016 நவம்பர் 08 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

“ஸ்ரீ லங்கா பொதுஜன கட்சியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் வைபவத்தை, முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்‌ஷவின் பிறந்த நாளான நவம்பர் மாதம் 18ஆம் திகதியன்று நடத்துவதற்கு திட்டமிடவில்லை” என்று, அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார்.  

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பிறந்ததின வைபவத்தை, அநுராதபுரம் ஸ்ரீ மகாபோதிக்கு அண்மையில், நவம்பர் மாதம் 19ஆம் திகதியன்று, சமய வழிபாடுகளுடன் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.  

இந்த வைபவத்தை ஏற்பாடு செய்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதித் லொக்குபண்டார, “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பிறந்தநாள் வைபவம், கடந்த ஆண்டுகளில் நவம்பர் மாதம் 18ஆம் திகதியன்றே இடம்பெற்றது. எனினும், 2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பு அன்றைய தினமே இடம்பெறவிருப்பதனால், பிறந்தநாள் வைபவத்தை மறுநாளான 19ஆம் திகதியன்று நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.  

இச்சமய வழிபாடுகளின் போது, பெருந்திரளான பௌத்த தேரர்களும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் பங்குபற்றவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். 

அன்றைய தினம், ஸ்ரீ லங்கா பொதுஜன கட்சிக்கு உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை, உத்தியோகபூர்வமாக அன்றையதினம் மேற்கொள்ளப்படமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .