2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

12,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

Editorial   / 2019 ஜூலை 23 , பி.ப. 05:39 - 2     - {{hitsCtrl.values.hits}}

12,000 பட்டதாரிகளுக்கு இந்த மாதம் 30,31, ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதிகளில் வேலைவாய்ப்புகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, 2013ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டு வரை பட்டம் பெற்ற மாணவர்களுக்காக இந்த வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

வெளிவாரி பட்டதாரி மாணவர்களுக்கும் தொழில்வாய்ப்புகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டதாரிகள் அனைவருக்கும் ஒரே தடவையில் தொழில்வாய்ப்புகளை வழங்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்று நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பட்டதாரிகள் எந்த கட்சி, எந்த இனம் என்று பாராமல் வெளிப்படையாக இந்தத் தொழில்வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 2

  • Rushan Friday, 26 July 2019 01:29 AM

    இவ் அரசு வெளிவாரிப் பட்டதாரிகளுக்கு எதிராக செயற்படுவதனை குறித்து ஒரு சிறு வசனம் கூட இல்லை.

    Reply : 0       0

    Manoj Friday, 26 July 2019 02:03 PM

    Chemical engineering

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .