Editorial / 2026 மே 10 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள தமிழக முதல்வர் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச, தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மையை அடித்தளமாகக் கொண்ட ஒரு புதிய யுகத்தைப் பற்றி நீங்கள் பேசினீர்கள். வெறுப்பு மற்றும் பழைய காயங்களின் மீது மட்டுமே கட்டப்படும் சமூகங்கள் இறுதியில் தனிமைப்படுத்தப்படும் என்பதையும்; அதே நேரத்தில் நீதி மற்றும் சகவாழ்வின் மீது கட்டப்படும் சமூகங்களே மக்கள் உண்மையாக வாழ விரும்பும் எதிர்காலத்தை உருவாக்கும் என்பதையும் வரலாறு நமக்குக் காட்டியுள்ளது.
உலகம் ஏற்கனவே பிரிவினைகளால் நிறைந்துள்ளது. நம் பிராந்தியத்தில் உள்ள மக்கள் அனைவரும் மொழி, மதம் அல்லது அடையாளம் கடந்து உண்மையாக எதிர்பார்ப்பது சமூக முன்னேற்றம், நீதி மற்றும் நிலையான தன்மையையே ஆகும். நம்மைப் பிரிக்கும் விடயங்களை விட, நம்மிடையே உள்ள பொதுவான பண்புகளும் ஒற்றுமைகளும் மிக அதிகம்.
இந்தப் புதிய அத்தியாயம் முன்னேற்றத்தையும், கருணையையும், கடந்த காலத்தில் மற்றவர்கள் இடைவெளியை உருவாக்கிய இடங்களில் ஒருமித்த புரிதலையும் ஏற்படுத்துவதற்கான ஆற்றலைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago