Editorial / 2025 பெப்ரவரி 12 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

சுற்றுலாப் பயணிகளாக வந்து விசா இல்லாமல் நாட்டில் தங்கியிருந்த சீன பிரஜைகள் 12 பேரையும் ஒரு வியட்நாம் பிரஜையையும் உடனடியாக நாடு கடத்த கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவெல செவ்வாய்க்கிழமை (11) உத்தரவிட்டார்.
குடியகல்வு மற்றும் குடிவரவு சட்டங்களை மீறியதாக கண்டறியப்பட்ட குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றாலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் விரைவில் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு விசாக்களை பெற்றுள்ளனர் என்பதை கருத்தில் கொண்டு நாடு கடத்தல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதவான் அறிவுறுத்தியுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க குடிவரவு மற்றும் குடியேற்ற அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும், சந்தேக நபர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 50,000 அல்லது 6.5 மில்லியன் அபராதம் விதிக்கவும், அபராதம் செலுத்தப்படாவிட்டால், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருக்கு கட்டாய ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தலா ஒரு வருடம் சிறை தண்டனை விதித்த மேலதிக நீதவான், முன்வைக்கப்பட்ட காரணங்களின் அடிப்படையில் தண்டனையை ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைத்ததுடன், அபராதம் செலுத்துவது கட்டாயமாகும் என்றும் உத்தரவிட்டார்.
7 minute ago
19 minute ago
24 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
19 minute ago
24 minute ago
32 minute ago