2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

12 மணி நேர மின்வெட்டு ஏற்படலாம்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 13 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் நிலக்கரி இருப்புகளை கொண்டு வருவதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாவிட்டால் 12 மணி நேரம் மின்வெட்டு ஏற்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அண்மைக்காலமாக பெய்து வரும் மழை காரணமாக, தற்பொழுது  மின்சார உற்பத்தி பெரும்பாலும் நீர் மின்சாரம் மற்றும் நிலக்கரி மூலம் மேற்கொள்ளப் படுவதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். 

எனினும், இந்த நடவடிக்கை டிசம்பரில் மாத்திரமே செய்யப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 அத்துடன், ஓக்டோபர் முதல் ஏப்ரல் வரை மட்டுமே நிலக்கரியை இறக்குமதி செய்ய முடியுமெனவும், இதனால் எதிர்காலத்தில் மின்வெட்டு காலப்பகுதி 12 ,மணித்தியாலங்களாக அதிகரிக்கப்படலாமென ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X