2025 ஜூன் 25, புதன்கிழமை

13 பேர் உயிரிழந்த விவகாரம்; பொறுப்பதிகாரி இடமாற்றம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 05 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்லேவெல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்துக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் இடம்பெற்றுவந்த மதுபான தயாரிப்பை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைக்க அமைய அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் தயாரிக்கப்பட்ட மதுபானத்தை அருந்து இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், பொலிஸ் பொறுப்பதிகாரி தொடர்பில் பொலிஸ் விசேட விசாரணை பிரிவின் உயர் பொலிஸ் அதிகாரியின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .