2026 மே 02, சனிக்கிழமை

150 பறவைகள் திடிரென இறந்து கிடந்தன

Editorial   / 2020 டிசெம்பர் 25 , பி.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம், வனாத்தவில்லு, எழுவான்குளத்தில் உள்ள ரால்மடுவா பகுதியிலுள்ள வயலில் ஏராளமான பறவைகள் இறந்து கிடந்தன என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புஷ் லார்க், புறா உட்பட நெல் வயல்களில் காணப்படும் பல்வேறு வகையான பறவைகள் உள்ளிட்ட கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்ட  பறவைகள் இறந்து கிடத்துள்ளன. இவை குறித்து திணைக்களம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.

ஒருவித விஷம் காரணமாக பறவைகள் இறந்திருக்கலாம் என சந்தேகம் கொள்ளும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள்,  இறந்த பறவைகளை ஏனைய விலங்குகள் சாப்பிட்டதன் பின்னர், அந்த விலங்குகளும் பின்னர் இறப்பதைத் தடுக்கும் பொருட்டு இறந்த பறவைகளை அதிகாரிகள் சேகரித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .