2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

20 கி.கிராம் ​கேரள கஞ்சாவுடன் கற்பிட்டியில் இருவர் கைது

Editorial   / 2019 பெப்ரவரி 18 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

கற்பிட்டி- கண்டல்குழி ஈச்சன்காடு கடற்கரை பிரதேசத்தில், படகுமூலம் கொண்டுவரப்பட்ட ஒருதொகை கேரளக் கஞ்சாவுடன், சந்தேக நபர்கள் இருவர் நேற்று அதிகாலை (18) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி- கண்டல்குழி பகுதியைச் சேர்ந்த, 49 மற்றும் 53 வயதுகளையுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகாலை 3 மணியளவில், புத்தளம் மாவட்ட போதைப் பொருள்  ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து, விசேட சுற்றிவளைப்பை மேற்கொண்ட போதே, சந்தேகநபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து, 20 கிலோ 35 கிராம் நிறையுடைய கேரளக் கஞ்சா மற்றும் இயந்திரப் படகு என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .