2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

உ/த வெட்டுப்புள்ளி 2 வாரங்களில் வெளியாகும்

Gavitha   / 2015 செப்டெம்பர் 21 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வருடம் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் சித்தி  பெற்று பல்கலைக்கழக நுழைவுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம்முறை 25 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை பல்கலைக்கழகத்தில் இணைத்துக்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, 65 ஆயிரம் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பல புதிய பாடத்திட்டங்கள்  பல்கலைக்கழக கல்வித் திட்டத்தில் இம்முறை சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X