Freelancer / 2022 ஜனவரி 01 , பி.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
2022 இல் கொரோனா தொற்றுநோய் தோற்கடிக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள புத்தாண்டு அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், குறுகிய தேசியவாதம் மற்றும் தடுப்பூசி பதுக்கலுக்கு எதிராக எச்சரிக்கையையும் அவர் விடுத்துள்ளார்.
சீனாவில் அறியப்படாத நிமோனியா பாதிப்பு குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு முதன்முதலில் அறிவிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அவரது கருத்துக்கள் வெளிவந்துள்ளன.
உலகளாவிய கொரோனா தொற்று 287 மில்லியனாக உள்ளதுடன், கிட்டத்தட்ட 5.5 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர்.
29 minute ago
1 hours ago
5 hours ago
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago
5 hours ago
14 Dec 2025