Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Simrith / 2025 ஜூலை 28 , பி.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
2019 ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதற்காக குற்றவியல் அலட்சியம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, செப்டம்பரில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதிகள் நாமல் பலல்லே மற்றும் முகமது இர்ஷதீன் ஆகிய மூவர் கொண்ட நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையின் போது, சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், முன்னர் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி ஆதித்ய படபெந்திகே, தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
எனவே, புதிய நீதிபதி அமர்வை நியமிக்க புதிய தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
புதிய அமர்வு நியமிக்கப்படும் வரை, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், விசாரணைக்கு புதிய திகதியை ஒதுக்குமாறு நீதிமன்றத்திடம் கோரினார்.
சமர்ப்பிப்புகளைப் பரிசீலித்த நீதிமன்றம், வழக்கை செப்டம்பர் 18 ஆம் திகதி மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.
3 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago