2024 மே 14, செவ்வாய்க்கிழமை

231.54 கி.கி ​ஹெரோய்ன் கடத்தியவர்களுக்கு விளக்கமறியல்

Editorial   / 2018 டிசெம்பர் 12 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேருவளை – பலப்பிட்டிய பிரதேச கடற்பகுதியில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட பாரியளவிலான ஹெரோய்ன் போதைப் பொருள் சம்பவம் தொடர்பில்  கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களையும் இம்மாதம் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த இரு சந்தேகநபர்களையும் இன்று (12) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போதே, இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அத்தோடு, குறித்த சம்பவம் தொடர்பில் யட்டியாந்தோட்டையிலிருந்து மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை இன்னமும் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .