2025 ஜூலை 05, சனிக்கிழமை

300 கி.கி கடலட்டைகள் கண்டுபிடிப்பு

Editorial   / 2019 ஜனவரி 14 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட கடலட்டைகள் 300 கிலோகிரா​​மை மன்னார் கடற்பகுதியில் வைத்து இன்று (14) அதிகாலை, இலங்கை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போதே, குறித்த தொகை கடலட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

300 கிலோகிராம் கடலட்டைகள் மற்றும் டிங்கி படகொன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் இதுகுறித்து சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லையென்றும், குறித்த டிங்கி எனும் படகில் 12 கடலட்டை மூட்டைகள் காணப்பட்டதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .