2025 ஜூன் 16, திங்கட்கிழமை

500 KG ஹெரோய்ன், ஐஸூடன் 2 படகுகள் சிக்கின : 11 பேர் கைது

Editorial   / 2025 மே 28 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்படையினரால்   தெற்கு கடற்கரையில் செவ்வாய்க்கிழமை (27) தடுத்து நிறுத்தப்பட்ட இரண்டு பல நாள் மீன்பிடி படகுகள் சுமார் 500 கிலோ கிராம் ஹெரோய்ன் மற்றும் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ICE) ஆகியவற்றைக் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் இணைந்து நடத்திய இந்த நடவடிக்கையில் பதினொரு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் தெவிநுவரவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் மேலதிக விசாரணைகளுக்காக திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .