2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

'6 மாதங்களில் ஜனாதிபதித் தேர்தல்'

Editorial   / 2019 மார்ச் 27 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்னும் 6 மாதங்களில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் அதேவேளை, தேர்தலில் ராஜபக்ஷ குடும்பத்திலிருந்தே, ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தெரிவாகும் நிலை காணப்படுவதாக, மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

 மாத்தறை  பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் கூட்டமைப்பு அமைக்கப்படும் சந்தர்ப்பங்களில், சிறுபான்மைக் கட்சிகள் பிரதான கட்சியுடன் இணைவதே வழமை. இன்று பலமான எதிர்க்கட்சியாக நாம் இருக்கிறோம். அதனால், பொதுஜன பெரமுனவுடனேயே கூட்டமைப்போம். சின்னம் மொட்டாகவே இருக்கும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் விரிசல் காணப்பட்டது, ஆனால் தற்போது அத்தகைய நிலை  இல்லையென, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X