2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

6 விமானங்கள் கட்டுநாயக்கவில் வட்டமிட்டது ஏன்?

Editorial   / 2026 ஏப்ரல் 01 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 டி.கே.ஜி.கபில

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தைச் சூழவுள்ள பகுதிகளில் திடீரென ஏற்பட்ட கடும் மழை காரணமாக, தரையிறங்குவதற்காக வருகை தந்த 6 விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வான்பரப்பில் வட்டமிட்டதாக விமான நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

நேற்று (மார்ச் 31) இரவு 9.45 மணியளவில் ஏற்பட்ட இந்த திடீர் வானிலை மாற்றம் காரணமாக

  • சீனாவின் குன்மிங்கில் இருந்து வருகை தந்த சைனா ஈஸ்டர்ன் (China Eastern) விமானம்.
  • டுபாயில் இருந்து வருகை தந்த எமிரேட்ஸ் (Emirates) விமானம்.
  • தாய்லாந்தின் பெங்கொக்கில் இருந்து வருகை தந்த எயார் ஏசியா (Air Asia) விமானம்.
  • மெல்பேர்ன், சென்னை மற்றும் லாகூர் ஆகிய நகரங்களில் இருந்து வருகை தந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) விமானங்கள்.   இக்கட்டான நிலைக்கு உள்ளாகின:

  இவற்றில் சீனாவின் குன்மிங்கிலிருந்து இரவு 9.49 மணிக்கு கட்டுநாயக்கவில் தரையிறங்க வேண்டிய சைனா ஈஸ்டர்ன் விமானம், சுமார் ஒரு மணிநேரம் வான்பரப்பில் வட்டமிட்டது. இறுதியில் அந்த விமானம் இரவு 10.50 மணியளவில் மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .