2024 மே 18, சனிக்கிழமை

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் பூஸ்டர்

J.A. George   / 2021 நவம்பர் 16 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு  கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது அளவு ( பூஸ்டர்) நாளை(16) முதல் செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமான இதனை தெரிவித்துள்ளார்.

மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அநுராதபுரம் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு  இந்த பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெற்று மூன்று மாதங்கள் ஆனவர்களுக்கே  ஃபைசர் தடுப்பூசி பூஸ்டராக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .