2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

'9 மரணங்களும் ஒரே நாளில் பதிவாகவில்லை’

R.Maheshwary   / 2020 நவம்பர் 22 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதரார சேவை பணிப்பாளரால் நேற்று அறிக்கையிடப்பட்ட 9 கொரோனா மரணங்களும் நேற்றைய தினத்தில் மாத்திரம் பதிவாகவில்லை என, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த மரணங்களில் நேற்றைய தினம் 4 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனரெனவும் ஏனைய 5 பேரும் 2 நாள்களுக்கு முன்னர் உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த மரணங்களின் மரண விசாரணை அறிக்கை கிடைத்ததும் அனைத்தும் ஒன்றாக ஒரே நாளில் அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X