2026 மே 06, புதன்கிழமை

90 பேர் குவைட்டில் இருந்து வந்தவர்கள்

Editorial   / 2020 மே 26 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் நேற்று மாத்திரம் 41 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனையடுத்து,  நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1182ஆக அதிகரித்துள்ளது.

அதில் 40 பேர் குவைட்டில் இருந்து வந்தவர்கள் என்றும் மற்றுமொருவர் டுபாயில் இருந்து வந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 477 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அத்துடன், இதுவரை 695பேர் குணமடைந்துள்ளதுடன் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, இரண்டு நாட்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 90 பேர் குவைட்டில் இருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .