2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

912 பேருக்கு கொரோனா தொற்று; 59 பேர் மரணம்

Freelancer   / 2021 செப்டெம்பர் 30 , பி.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் மேலும் 912 பேர் இன்றையதினம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். 

தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 516,209  ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 59 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

28 ஆண்களும் 31 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன்,  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,906 ஆக அதிகரித்துள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 47 பேரும் 30 மற்றும் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 11 பேரும் 30 வயதுக்குட்பட்டவர்களில் ஒருவரும் மரணித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .