2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

STF படையினர் 23 பேருக்கு கொரோனா

R.Maheshwary   / 2020 நவம்பர் 03 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 275 பேரில் 23 பொலிஸ் விசேட படையினர் உள்ளடங்குவதாக, கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 39 பொலிஸாருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் கொழும்பு 1-15 வரையான பிரதேசங்களிலிருந்து 32 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் கொழும்பு மாநகர சபை பணியாளர்கள் 9 பேர் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்றைய தினம் கம்பஹா மாவட்;டத்தில் 90 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .