2025 ஜூலை 05, சனிக்கிழமை

STFஇன் கட்டளையிடும் அதிகாரிக்கு இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் பாராட்டு

Editorial   / 2019 பெப்ரவரி 06 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதாளக் குழுத் தலைவரும் பிரபல போதைப்பொருள் வர்த்தகருமான மாக்கந்துர மதுஷ் கைதுசெய்யப்பட்ட நடவடிக்கைகான கௌரவம், பாராட்டு என்பன பொலிஸ் விசேடப் படையணியின் கட்டளையிடும் அதிகாரி லத்தீப்பையே சாரும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனால் லத்தீப், அவரது குழுவினரும் பாராட்டப்பட வேண்டியவர்களென்றும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மாக்கந்துர மதுஷ் உள்ளிட்ட 25 பேர் நேற்றைய தினம் டுபாயில் வைத்து கைதுசெய்யப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களுள் ஒருவரிடம் இராஜதந்திர கடவுச்சீட்டு காணப்படுவதாக டுபாயின் கலீஜ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .