2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

அ‘புர சிறை கண்காணிப்பாளருக்கு விளக்கமறியல்

Janu   / 2025 ஜூன் 11 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நபரை ஜனாதிபதி பொது மன்னிப்பு என்ற பெயரில் சட்டவிரோதமாக விடுவித்ததற்காக அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் மோகன் கருணாரத்னவை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய புதன்கிழமை (11) உத்தரவிட்டார்.

வெசாக் போயா தினத்திற்காக வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் ஒரு கைதியை சட்டவிரோதமாக விடுவித்த வழக்கில் குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) கைது செய்யப்பட்டு, அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (11) ஆஜர்படுத்தப்பட்ட போதே, நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X