Editorial / 2021 மே 14 , மு.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
தடுப்பூசிகளின் பற்றாக்குறையை எண்ணி அஞ்சுவதற்கு எந்த அவசியமும் இல்லையென இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” தகுதிவாய்ந்த ஒவ்வொருவருக்கும் சரியான நேரத்தில் கொவிட் -19 தடுப்பூசியானது செலுத்தப்படும்.
அத்துடன் வெளிநாடுகளிலிருந்து தேவையான தடுப்பூசிகளை வாங்குவதற்குறிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதோடு ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் லலித் வீரதுங்க தலைமையிலான குழுவினர் , அஸ்ட்ராசெனேகா தடுப்பூசிகளை வாங்குவதற்காக உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
எனவே வெகு விரைவில் அஸ்ட்ராசெனேகாவின் முதலாம் கட்ட தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் இரண்டாம் கட்ட தடுப்பூசியையும் செலுத்திக்கொள்ள முடியும் ”என அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .