2024 மே 02, வியாழக்கிழமை

அநுர சேனாநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

Editorial   / 2019 ஜூன் 27 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுடீனின் கொலைச் சம்பவம் தொடர்பான சாட்சிகளை மறைத்தார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்கவுக்கு இன்று கொழும்பு மேல்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மேல்நிதிமன்ற நீதிபதி விக்ரம் களுஆராச்சி முன்னிலையில் இக்குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் அநுர சேனாநாயக்கவை  தலா 20 இலட்ச ரூபாய்  சரீரப் பிணை இரண்டில் விடுதலை செய்வதற்கு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

பிரிவாதியின் வெளிநாட்டு கடவுச்சீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தின் அனுமதியின்றி வெளிநாடுகளுக்குச்  செல்வது தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .