2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

அனைத்து அமைப்பாளர்களும் நீக்கப்பட்டாலும் 'தேசிய அரசாங்கத்தில் இணையோம்'

Gavitha   / 2016 ஓகஸ்ட் 25 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாநூ கார்த்திகேசு

'எவ்வித போட்டியும் அற்ற, தனித்து அரசாங்கம் அமைக்கக் கூடியவிதத்திலான செயற்பாட்டையே, ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்டு வருகின்றது. அதற்குச் சாதகமான வகையிலேயே, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவம் செயற்பட்டுவருகிறது. ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தூண்களாக இருந்து, அதன் வெற்றிக்கு வழிவகுத்துக் கொடுத்த அமைப்பாளர்களே, கட்சியின் தலைமையால் விலக்கப்பட்டுள்ளனர். மிகுதி 12 பேரும் விலக்கப்பட்டாலும், நாங்கள் எந்தவொரு காலத்திலும் தேசிய அரசாங்கத்துடன் இணையப்போவதில்லை' என்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்தவருமான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

பொரளையில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில், நேற்று புதன்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், 'எந்நோக்கத்துக்காக ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி உருவாக்கப்பட்டதோ, அதேபோல் அந்த நோக்கம் இன்று கேள்விக்குறியாகும் வகையிலான செயற்பாட்டை, கட்சி தலைமை செய்கின்றது. பொதுத்தேர்தலின் போது, நாங்கள் தனிக்கட்சியாக ஆட்சி அமைப்போம் என்று கூறியே தேர்தலில் போட்டியிட்டோமே ஒழிய, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைப்போம் என்று கூறித் தேர்தலில் போட்டியிடவில்லை. ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்த அரசாங்கத்துடன், நாங்கள் என்றுமே ஒன்றிணையப் போவதில்லை' என அவர் தெரிவித்தார்.

'துறைமுகத்தில், 75 சதவீதமான பகுதி விற்பனை செய்யப்பட்டு விட்டது. இந்த அரசாங்கம், நாட்டை விற்கும் பணியிலேயே ஈடுபடுகின்றது. உலகில் அதிக வருமானம் ஈட்டும் பகுதிகளில் ஒன்றாக, கொழும்புத் துறைமுகம் 24ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. அப்படியான நிலையில், துறைமுகத்தை விற்க வேண்டிய தேவை என்ன?' என்றும் அவர் இங்கு கேள்வியெழுப்பினார்.

தொடர்ந்துக் கருத்துத் தெரிவித்த அவர், 'சி.எஸ்.என் அலைவரிசையில், உயர் பதவியொன்றுக்கு எனக்குப் பிரியமானவர்க்கு வழங்கியமை தொடர்பிலான விசாரணைக்கு, நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு, என்னை அழைத்திருந்தார்கள்.

பதவியொன்றைப் பெற்றுக்கொடுத்தமைக்கு நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவில் என்ன விசாரணை வேண்டியுள்ளது.

அப்படியாயின், அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவிலேயே இருக்க வேண்டும்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

9 hours ago - 0     - 9

‘படை தலைவன்’

9 hours ago - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7