Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 12, வியாழக்கிழமை
Thipaan / 2016 செப்டெம்பர் 14 , பி.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜே.ஏ.ஜோர்ஜ்
எதிர்காலத்தில் நிலக்கரிமின் உற்பத்தி நிலையங்களை, நாட்டில் அமைப்பது தொடர்பில் யோசனை செய்யபோவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றுப் புதன்கிழமை, நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அமைச்சர், 'நிலக்கரி பயன்படுத்தப்பட்டு செயற்படும் அனல் மின் நிலையங்களால், சூழலுக்கு தீங்கு ஏற்படுகின்றது. இது தொடர்பில் அவதானம் செலுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இனி இலங்கையில் அனல் மின்நிலையத்தை அமைக்கப்போவதில்லை என்ற தீர்மானத்தை எடுத்துள்ளார்' என்றார்.
'எனினும், தற்போது இயங்கும் அனல் மின்நிலையங்கள், தொடர்ந்தும் செயற்படும்' எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago