2025 நவம்பர் 15, சனிக்கிழமை

அமெரிக்கா- இலங்கை இடையில் பாதுகாப்பு புரிந்துணர்வு

Freelancer   / 2025 நவம்பர் 15 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவிற்கும், இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று நேற்று (14) கைச்சாத்திடப்பட்டுள்ளது.
 
பாதுகாப்பு அமைச்சில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இது அமெரிக்கா - இலங்கை பாதுகாப்பு உறவுகளில் ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிப்பதாக அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்தோ - பசிபிக் பகுதியில் பிராந்திய ஸ்திரத்தன்மை, கடல்சார் பாதுகாப்பு மற்றும் தொழில்முறை இராணுவ ஒத்துழைப்புக்கு இரு நாடுகளின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அடிக்கோடிட்டு காட்டுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (a) 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X