2025 ஜூலை 24, வியாழக்கிழமை

அமெரிக்காவில் வன்முறை தீவிரம்

Editorial   / 2020 ஜூன் 03 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து, அமெரிக்காவில் எட்டாவது நாளாகவும் போராட்டங்கள் தொடர்ந்ததுள்ளன.

பெரும்பாலான நகரங்களில், வன்முறை சம்பவங்கள் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில், 'நிலைமையை கட்டுக்குள் கொண்டு வராவிட்டால், இராணுவத்தை களமிறக்கவுள்ளதாக  அமெரிக்க ஜனாதிபதி  டொனால் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். 

ஜோர்ஜ் புளொய்ட்  (46) என்ற கறுப்பினத்தவர் விசாரணைக்காக கைதுசெய்யப்பட்ட பின்னர், பொலிஸாரால் கொலைசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும்  சம்பவத்தை கண்டித்து, அமெரிக்கா முழுதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. 

அத்துடன், 13 முக்கிய நகரங்களிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்டதாக, ஐந்தாயிரத்துக்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .