Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூலை 10 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறையில் இருந்து கொழும்பு நோக்கிய பயணித்த தனியார் பஸ்ஸின் பின்புறப்பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட 150 கிலோகிராம் நிறையுடைய அமோனியா ரசாயனம் யாருடைய தேவைக்காக கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பில் விரிவான விசாரணைகளை இரத்தினரிபுரி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
நேற்று (09) இரவு இரத்தினபுரி நகரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், அம்பாறையில் இருந்து கொழும்பு நோக்கிய பயணித்த தனியார் பஸ்ஸை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.
அதன்போது, 150 கிலோ 180 கிராம் நிறையுடைய அமோனியா அடங்கிய பொதி கைப்பற்றப்பட்டது.
குறித்த பொதியின் உரிமையாளர் பஸ்ஸின் இல்லையென்றும் பஸ்ஸின் பின்புறத்தில் அதனை ஏற்றியிருந்தால் அந்த நபர் தொடர்பில் தமக்கு தகவல் தெரியாது என, பஸ்ஸின் நடத்துனர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனரை கைதுசெய்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .